மனைவியை ஏன் கொன்றேன்? கணவனின் பரபரப்பு வாக்குமூலம்!

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா […]

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் முதலிடம்! இலங்கை பாஸ்போர்ட்?

விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் […]

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் நீரேந்து பகுதிகளில் இருந்து வரும் மேலதிக நீர்வரத்து காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, திருகோணமலை மாவட்டத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் மீண்டும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக, வெண்டராசன் குளம் மற்றும் கந்தளாய் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளியேறும் மேலதிக நீர் மகாவலி கங்கையில் கலந்து ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.”“கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் கடந்த நவம்பர் மாத […]

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்.

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்‌ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு […]

பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷானிகா லக்ஷானியை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இன்று வெள்ளிக்கிழமை (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 54(1) இன் கீழ் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க போதுமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்காததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் […]

செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலுக்கும் தொடர்பு..

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா […]

முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க, நாட்டிலுள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளது. வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும், பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் […]