பேக்கரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்பு

பேக்கரி பொருட்களுக்கு தேவையான கோதுமை மா, பட்டர், மாஜரின் மற்றும் பாம் எண்ணெய் போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பொதுமக்களும், பேக்கரி உள்ளிட்ட அனைத்து தொழில் துறையினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவரான என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள் ளார். குறைந்தது இன்னும் ஒரு மாதத்துக்கு பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சில மாதங்களாக மாவுத் தட்டுப்பாட்டால் தொழில்துறை சுமையாக […]

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷாவும் இல்லை

சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சிய சாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் திரிபோஷா […]

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் அழிப்பு

உலகின் மிகப்பெரிய யுக்ரைன் தயாரிப்பு சரக்கு விமானமான Antonov-225 Mriya ரஷ்யாவின் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிவ் நகருக்கருகில் ஹொஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய இராணுவ படை மேற்கொண்ட தாக்குதலின் போதே குறித்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் […]

இலங்கை வர இருந்தவர்கள் ரத்து செய்கின்றார்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போரைத் தொடுத்த பின்னர் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாதித்துள்ளது. ஆதாரங்களின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு புதிதாக வருபவர்களில் பெரும்பாலோர் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், வான்வெளிகள் இடையூறுகள் வழியாக செல்வதால் தங்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய தங்குமிடத்தை நீட்டித்துள்ளதாக நீர்கொழும்பில் அமைந்துள்ள சிலோன் மை ட்ரீம் என்ற சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த கமல் கருணாரத்ன தெரிவித்தார். “இது […]

தங்கம், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா ஜனாதிபதி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் ரஷிய படைகள் குண்டுகளை வீசத் தொடங்கின. ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி […]

இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு அமைய 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஏற்றுமதியில் 13 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஏற்றுமதி நடவடிக்கைகள் சிறந்த அளவில் உயர்வடைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 […]

இலங்கைக்கு பணவனுப்பல் 61 சதவீதத்தினால் வீழ்ச்சி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு பணம் அனுப்பப்படும் வீதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 61.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 259.3 மில்லியன் டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை பணியாளர்கள் சட்டபூர்வமற்ற வழிகளினூடாக அதிக விலைக்கு பணத்தை அனுப்புவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிலையாக வைத்துள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் […]