இந்தியக் கடன் முடிவடைகிறது, புதிய கடனுக்கான எந்த அறிகுறியும் இல்லை

இந்தியாவிடமிருந்து பெற்ற கடன் மே மாதத்து டன் முடிவடையும் என்றும் புதிய கடன் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்றார். மேலும், தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியை ஒத்திவைக்க வாய்ப்பில்லை எனவும், பாராளுமன்றம் நிதி அதிகாரத்தைப் பெற்று அனைவரின் கருத்துகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் […]
2024 வரை உலகளாவிய உணவு மற்றும் பொருட்களுக்கு பற்றாக்குறை நீடிக்கும்

ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது. 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள். கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகின் பல பகுதிகளில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியாளராகவும், மசகு எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் […]
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மணல் கியூப் ஒன்று ரூ. 21 ஆயிரமாக அதிகரிப்பு

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பலாங்கொடையில் மணல் கியூப் ஒன்றின் விலை 21,000 ரூபா வரை உயர்ந்துள்ள தாக மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் 13,000 ரூபாவாக இருந்த கனசதுர மணலின் விலை 21,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டணம், மணல் ஏற்றிச் செல்வதற்கான வாடகை போன்றவற்றின் காரணமாகவே மணல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]
ஜூலை மாதத்தில் பணவீக்கம் 29 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் சாத்தியமான விலை உயர்வு காரணமாக ஜூலை மாதத்தில் பணவீக்கம் 29% ஆக உயரும் என்று முதல் மூலதன ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் CCPI மேலும் 18.7% ஆக அதிகரித்தது, இது CBSL மற்றும் FC ஆராய்ச்சியின் விரும்பிய வரம்பான 4%-6% மற்றும் 5%-7% ஆகியவற்றை மீறியது. முதல் மூலதன ஆராய்ச்சியின் படி, ஸ்திரத்தன்மை அடையும் வரை மாற்று விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
விற்பனையின் போது துல்லியமான தரவுகள் கட்டாயம் – அதிவிசேட வர்த்தமானி

பொருட்களின் விற்பனை தொடர்பான துல்லியமான தரவுகளை கட்டாயமாக்கும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள், களஞ்சியசாலை உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கொள்கலன்களில் அல்லது விற்பனை நிலையங்களில் வைத்திருக்கும் பொருட்களுக்கு இந்த வர்த்தமானி பொருந்தும். அதற்கமைய, பொருளொன்றை தமக்கு விநியோகித்த உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வர்த்தகரினால் வழங்கப்படும் எழுத்துமூல அல்லது அச்சிடப்பட்ட வகையிலான பற்றுச்சீட்டினை வர்த்தகர்கள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தவிர பொருளை […]
ஸ்தம்பிதமடைந்த பொருளாதார மத்திய நிலையங்கள்

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டிலுள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்களும் ஒன்றிணைந்துள்ளன. இன்று(28) வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் நேற்று(27) அறிவுறுத்தியிருந்தனர். மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாத நிலையில் வர்த்தகர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தனர். வெலிமடை கெப்பெட்டிபொல விசேட மத்திய நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மரக்கறி கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறவில்லை. தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையமும் இன்று(28) மூடப்பட்டிருந்தது. தம்புள்ளை […]
இன்றைய (28) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com