விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்!

கொழும்பின் திறன் மற்றும் வளர்ச்சிபிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகம், நகரத்தின் கவர்ச்சியை கணிசமாக உயர்த்தியிருக்கலாம், இது பார்க்க எளிதான தெற்காசிய நகரங்களில் ஒன்றாகும்,” என்று பிராண்டு ஃபைனான்ஸ் சமீபத்திய செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. சரிவை எதிர்கொண்டும் முன்னேற்றம்எனினும், கொழும்பு சமீபத்தில் […]
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் செய்த துணிச்சலான செயல்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அன்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது […]
AI போதும் ! பணியாளர்கள் வேண்டாம் !

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பலர் வேலை இழக்க நேரிடும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இதைப் பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறுவதுண்டு. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல ஃபின்டெக் நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்தியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, தொழில்நுட்ப நிறுவனமான கிளார்னா ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது. மேலும், ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் செய்யும் அனைத்து வேலைகளையும் செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் […]
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் புதிய தலைவரின் வாக்குறுதிகளை காப்பாற்றுவது கடினமாக இருக்கும் – BBC

இடதுசாரி சார்புடைய புதிய ஜனாதிபதியும் அவரது கட்சியும் பெற்ற அதிர்ச்சியூட்டும் தேர்தல் வெற்றிகள் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பை மாற்றியுள்ளன – ஆனால் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தீவின் புதிய ஆட்சியாளர்கள் பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட நிறைவேற்றுவது எளிது என்பதை விரைவாக உணர்ந்து வருகின்றனர். செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. புத்தாண்டு தொடங்கும் […]
இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர்…

‘த வொய்ஸ் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள ‘மகளி’ என்ற அல்பம் பாடல் வெளியிடப்படவுள்ளது. மகளிரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் புரட்சிப் பாடலுக்கான வரிகளைப் பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES பகுதியில் […]
சீனாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வீடு ஒன்று பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் மீன்பிடித் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள துறைமுகப் பகுதியில் இந்தப் பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் தற்போது நாவற்குழிப் பகுதியில் உள்ள யாழ். மாவட்ட செயலக களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டு மாதிரியை மீனவர்கள் பார்வையிடுவதற்காகவே பருத்தித்துறையில் ஒரு வீடு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது புதிய வியாபார மாஃபியா.

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது புதிய வியாபார மாஃபியாவாக மாறிவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் பெரிதும் பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். பெற்றோர்கள் தங்களின் வருமானத்தின் 60 சதவீதத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிக்கின்றனர். இது பொதுவாக தனியார் வகுப்புக்களுக்கு செலவாகும். கல்வியை விற்பனை பொருளாக மாற்றியுள்ள இந்த தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கின்றன. “தனியார் […]