நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் துரித நிவாரணத் திட்டமொன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் […]
எரிபொருள் அட்டை அறிமுகம் இப்போதே பதிவு செய்யுங்கள்

நாடு முழுவதும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டினை உறுதி செய்வதற்கு ஒரே எரிபொருள் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். 1 அடையாள அட்டைக்கு 1 வாகனம், வாகன சேஸி எண் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் […]
தேசிய எரிபொருள் அட்டை முறைமை கடினமானது – ஹர்ஷ

வாகன உரிமையாளர்களுக்கான கோட்டா முறையின் கீழ் வாராந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்வது கடினம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார். குறித்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்கள் ஆகியும் பலமுறை முயற்சித்தும் உரிய இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யமுடியவில்லை என அவர் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்குப் பதிலளித்ததில், அந்த ட்விட்டர் […]
கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் டன் அரிசி

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவினால் 1,000 மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. சீன உணவு உதவி திட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டாம் கட்ட அரிசி தொகுதியே பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களுக்கு உட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்காக ஒரு நேர போசாக்கான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது. இந்த செயற்பாடானது மாணவர்களுக்கு வழங்கப்படும் விஷேட உதவி […]
பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிக்க தயார் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், மற்றைய கப்பலில் 41 ஆயிரம் மெற்றிக்தொன்னும் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன. அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்துவரும் கப்பல்களில் எரிபொருள் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் கட்டணங்களை செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் நாளை மறுதினம் […]
ஓய்வுபெற்ற வரப்பிரசாதம் கோட்டாபயவுக்கும் கிடைக்குமா.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய காலத்திற்கு முன்னர் பதவி விலகியிருந்தாலும், ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களை அவர் பெறுவார் என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமை சட்டத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்குப் பின்னர் அவரது மனைவியும் அனுபவிப்பர் என எமது செய்தி பிரிவுக்கு அவர் தெரிவித்தார். இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் […]
டீசல் கப்பல் இலங்கை வந்தது!

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று (16) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் பெற்றோல் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் (18-19 ஆம் திகதி) நாட்டை வந்தடையுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். லங்கா ஐஓசி நிறுவனம் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மிக […]