ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

வெள்ளிக்கிழமையுடன் (05) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது. எனினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா ஏற்ற இறக்கமாக உள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]

முச்சக்கரவண்டி மற்றும் பேருந்துகளுக்கு தனி QR குறியீடு

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும் மகும்புரஹா பஸ்டியன் மாவத்தையில் (makarpura bastian mawatha ) அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு […]

இலங்கையில் கிளைபோசெட்டின் இறக்குமதி தடை நீக்கம்!

களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானியின் கையெழுத்திட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை […]

எரிபொருள் விநியோகத்துக்கான QR பதிவு மீண்டும் ஆரம்பம்!

தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் புதிய பதிவுகளுக்காக இந்த அமைப்பு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]

சீனா கப்பல் ஏற்படுத்தியுள்ள கலகம்

சீனாவின் நவீன கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் நிகழ்வுகள், உள்நாட்டிலும், பிராந்திய, பூகோள ரீதியிலும் கலகத்தை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன. இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது, இந்தியா தனது தேசத்தின் தேசிய பாதுகாப்பு மீது கொண்டிருக்கும் அதீதமான கரிசனைகளும், அமெரிக்கா தலைமையிலான பங்காளிகளின் மூலோபாயங்களும் தான். இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் கட்டுரையாளருடன் உரையாடிய போது அதனை மிகத்தெளிவாக குறிப்பிட்டார். […]

கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்

கால்நடை துறையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் தமது நாளாந்த புரதத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை விலங்குப் புரதத்தில் இருந்து பெற வேண்டும் என கலாநிதி உஷான் பல்லேகம தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கோழி, முட்டை மற்றும் பால் தொடர்பான உள்ளூர் உற்பத்திகள் சந்தையில் கிடைக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்தையும் […]

வேலைவாய்ப்பிற்காக ஒவ்வொரு மணித்தியாலமும் 32 பேர் இலங்கையை விட்டு வெளியேறுகிறார்கள்!

இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்து மக்கள் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்திருந்தது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மணி நேரமும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிய வந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 181 நாட்களில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மத்திய வங்கியின் தரவுகள் இதனை குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத படகுப்பயணங்கள் மூலம் தமிழகத்திற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் செல்பவர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. […]