எரிபொருள் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 203 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 139 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில், இந்த மாதத்தில் மாத்திரம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்