ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரு யுவதிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.பூதன் வயல் மற்றும் மாம்பூலி பகுதிகளில் இருந்து குமுழமுனை பகுதிக்குச் சென்ற இந்த இரு யுவதிகள் தமக்கு தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்று […]

இளம் தாய் கொலை, தீவிர விசாரணையில் பொலிஸார்!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனபொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு […]

மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்!

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பன்முக நடிப்புத்திறனுக்காக அறியப்பட்ட மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் சென்னையில் இன்று (29) காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. குறைந்த இரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் கே. பாலசந்தரின் பாராட்டப்பட்ட படமான அவள் ஒரு தொடர் கதை மூலம் ராஜேஷ் திரைப்படத் துறையில் அறிமுகமானார். பின்னர் கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் முதல் கதாநாயகனாக நடித்தார். பல ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு […]

யாழில் பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார். இதன் […]

மறைந்து போன தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சென்ற இளைஞன், கிடைத்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் கடந்த 2025.01.07 ஆம் திகதி வெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சட்டரீதியாக சென்ற நிலையில் இரு மாதங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது. மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ள நிலையில அவரின் குடும்பத்தார் இன்று(25) ஊடகசந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் […]