கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று 28.12.2024 யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது. இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. அத்துடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.
கேப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவு.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது. இந்த குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க. துணை செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி […]