பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சி

விவசாயத்துக்கு முன்னுரிமையளித்து, அதற்காக அதிக நிதியை ஒதுக்கி, பாரிய விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர்த்து, எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும், கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயண உரம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
இன்று கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம் வெளியானது

கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை ட்விட்டர் பதிவொன்றில் அவர் வெளியிட்டுள்ளார். இதன்படி, 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது. 37,391 மெற்றிக் டன் 92 ஒக்டேன் […]
தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சியை பதிவுச் செய்துள்ளது

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், […]
இலங்கையில் கட்டுமானத் துறையில் 1.2 மில்லியன் பேர் ஒரு மாதத்துக்குள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு மறைமுகமாகப் பங்களிக்கின்றனர். இருப்பினும் அடுத்த மாதத்துக்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்வர் என தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. போல் குறிப்பிட்டார். தற்போது 90% ஆன கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். […]
எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் டொலர் செலவு

00 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சராசரியாக அலகொன்றுக்கான உற்பத்தி செலவீனம் 48 ரூபா 2 சதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதுப்பிக்கதக்க சக்தி திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில், கைத்தொழில், அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள், மற்றும் விருந்தகங்கள் என்பவற்றின் மின்கட்டணங்கள் மூன்று […]
இலங்கையில் நாளாந்தம் 55 பேர் மரணம்!

இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வருடாந்தம் சுமார் 20,000 இலங்கையர்கள் மரணிப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தவகையில் இந்த ஆண்டு உலக புகையிலை […]
எரிபொருள் விநியோக முறைகேட்டை கண்டறிய புதிய செயலியை உருவாக்கியுள்ள பொலிஸார்

வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பொலிஸாரால் குறித்த செயலி கண்காணிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வாகனங்களின் இலக்கத்தை செயலியில் பதிவேற்றியதன் பின்னர், குறித்த வாகனத்திற்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருளின் […]