சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளது. சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம் விலை 400 ரூபாவுக்கும் அதிகமாகவுள்ளது. கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழங்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி […]

நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்

இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை […]

சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு

இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளன. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்;த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எரிவாயு தாங்கிய […]

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா (Chiyo Kanda) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உலக வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம்

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைய பயறு செய்கையினை மேற்கொள்ளும் குடும்பம் ஒன்றுக்கு 18,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் இலங்கைக்கான பிரதிநிதி விம்லெம்ரா செரன் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுபோகத்தில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் […]

தவறான விவசாய கொள்கை, 72 வருடகால முன்னேற்றத்தை இல்லாதொழித்துள்ளது.

அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை 72 வருடகால விவசாயத்துறையின் முன்னேற்றத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது. அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காததன் விளைவை தற்போது எதிர்க்கொள்வதுடன், எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கொள்ள நேரிடும். உணவு தட்டுப்பாடு சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்களை விரைவாக செயற்படுத்தாவிடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1 இலட்சத்து 95 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை மாதந்தம் இறக்குமதி செய்ய நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே தெரிவித்துள்ளார். […]

சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து பெற்றோல் என்பனவற்றையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் […]