ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள […]
கட்சித்தலைவர்களின் தீர்மானத்துக்கு செவிசாய்க்க தயார்

பிரதமரால் கூட்டப்படும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக,நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த நிலையிலேயே பிரதமரின் […]
கட்சித்தலைவர்களுக்கு ரணில் அழைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, வசந்த யாப்பா பண்டார உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் […]
திவாலாகிவிட்ட ஒரு நாட்டில் வாழ்க்கையின் தினசரி மனவேதனை

இப்போது இலங்கையில், நீங்கள் விழித்துக்கொள்ளும் முன், நீங்கள் தோற்றுப் போகிறீர்கள். மின்வெட்டு இரவுகளில் தாமதமாக இயங்கும் மின்வெட்டு, மின்விசிறிகள் நிறுத்தப்படுவதால் மணிநேர தூக்கத்தைத் திருடுகிறது; நாடு திவாலாகி, எரிபொருள் தீர்ந்த பிறகு, தினசரி இருட்டடிப்புகளைச் சுற்றி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பல மாத சோதனையிலிருந்து முழு குடும்பங்களும் விழித்தெழுந்தன. வாழ நீண்ட நாட்கள் உள்ளன; வேலை நாட்கள், வேலை செய்ய வேண்டிய வேலைகள், தினசரி அத்தியாவசியப் பொருட்கள் கடந்த மாதம் இருந்த விலையை விட இரண்டு மடங்குக்கு […]
ட்விட்டர் ஒப்பந்தத்தில் இருந்து எலோன் விலகினார்

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான $44bn (£36bn) முயற்சியை நிறுத்த முற்படுகிறார், ஒப்பந்தத்தின் பல மீறல்கள் என்று குற்றம் சாட்டினார். ஏப்ரலில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ட்விட்டரை வாங்க முடிவு செய்த பிறகு இந்த அறிவிப்பு நீண்ட காலமாக நடந்து வரும் கதையின் சமீபத்திய திருப்பமாகும். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த போதுமான தகவல்களை ட்விட்டர் வழங்கத் தவறியதால் தான் பின்வாங்கியதாக திரு மஸ்க் கூறினார். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கை […]
கனடா மொபைல், இணையத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளது

கனடாவின் மிகப்பெரிய மொபைல் மற்றும் இன்டர்நெட் வழங்குனர் பெரும் செயலிழப்பை சந்தித்துள்ளது, வங்கி ஏடிஎம்கள் மற்றும் அவசர சேவை ஹாட்லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரச்சினையால் அரசாங்க செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய பிரச்சனைக்கு தீர்வு காண துரிதமாக செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. […]
அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தி

சோளத்திற்கு பதிலாக அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் பல இணைந்து தயாரித்த அவசர போசாக்கு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். இந்த திட்டத்தின் பிரகாரம் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களின் போசாக்குத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க குறிப்பிட்டார். புலத்தையும் நிலத்தையும் […]