தற்போதைய கடவுச்சீட்டு வழங்குவதை வலுப்படுத்த தயாராகும் அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். தற்போதைய கடவுச்சீட்டு வழங்கும் பொறிமுறையைப் புதுப்பித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடவுச்சீட்டு வழங்கலின் வேகத்தை உறுதி […]
யாழ்ப்பாணத்தில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்!

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி – நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று […]
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் அங்குள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புக்கு (IOM) ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும்அலுவலகங்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக் பிடிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் இணைய இணைப்பை […]
கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகளுக்கு தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும், கடவுச்சீட்டு கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் இடத்தில்மாத்திரம் அதனை செலுத்தி உத்தியோகப்பூர்வ பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வழமையான மற்றும் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் தற்போது தினமும் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி […]
ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு, குடியேறிகள் அதிர்ச்சி!

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். குவைத தலைவர் , 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார். […]
இனி 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு. – யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு காரியாலயம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் […]
விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்!

கொழும்பின் திறன் மற்றும் வளர்ச்சிபிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகம், நகரத்தின் கவர்ச்சியை கணிசமாக உயர்த்தியிருக்கலாம், இது பார்க்க எளிதான தெற்காசிய நகரங்களில் ஒன்றாகும்,” என்று பிராண்டு ஃபைனான்ஸ் சமீபத்திய செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. சரிவை எதிர்கொண்டும் முன்னேற்றம்எனினும், கொழும்பு சமீபத்தில் […]