இனி பஸ் நடத்துனர்களுக்கு வேலை இல்லை?

அடுத்த வருடம் ஜனவரி முதல் பஸ் நடத்துனர்கள் இல்லாது தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் பஸ்களில் பெறப்படும் வருமானத்தை கொண்டு பஸ் நடத்துனர்கள், சாரதி என இருவருக்கும் சம்பளங்களை வழங்குவது சிரமமாக உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் முற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி பஸ் கட்டணங்களை செலுத்தி, சாரதிகள் இல்லாது பஸ்களை இயக்குவதுத் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com