வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள்

மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டுளளன.

நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் கீழ் மன்னார்,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கமநல அபிவிருத்தித் தினைக்களத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் வைபவ ரீதியாக இவற்றை வழங்கினார்.

நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு, உதவி கமநல சேவை ஆணையாளர் மெரீன் குமார் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்