தேசிய பெற்றோலிய மற்றும் வாயுக்கள் நிறுவனத்தை நிறுவுவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் நிறுவனத்தை நிறுவுவதற்கு எரிசக்தி அமைச்சரினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
2011 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் மன்னார் அகழி நிலப்பரப்பின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய, எமது நாட்டில் பெற்றோலிய மற்றும் இயற்கை வாயுப் படிமம் காணப்படுவதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூர் நுகர்வுக்கான வாய்ப்பை உருவாக்குதல். அத்துடன் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியான சாத்திய வளங்களுடன் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இயலுமை கிடைக்கும் வகையில் உள்ளூர் வாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திகள் உள்ளடங்கலாக, களஞ்சியப்படுத்தல், குழாய்களைப் பொருத்துதல், போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், உரிமம் மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்குரிய அரச – தனியார் பங்குடமையின் கீழ் தேசிய வாயுக்கள் கம்பனியொன்றை அரசாங்கத்தால் நிறுவுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமென ‘இலங்கையில் இயற்கை வாயுக்கள் தொடர்பான தேசிய கொள்ளைப் பிரகடனத்தின்’ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் நிறுவப்படவுள்ளது.
குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் ஏ பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com