நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.
அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெருமவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் மாணவரான நிமேஷ் சமத் பெரேரா, நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் மாணவி ஷினாலி ருவண்யா பீரிஸ் ஆகியோரின் சித்திரங்களை கொண்ட நத்தார் தின நினைவு முத்திரை இம்முறை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா எனும் மாணவனால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவரால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தார்.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com