மரக்கறி வகைகளின் விலைகள் வரலாறு காணாதளவில் அதிகரித்துள்ளதால் மலையக பகுதிகளில் விளைந்த மரக்கறிகள் இன்னும் கொழும்பு மொத்த சந்தைக்கு வரவில்லையென மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உர நெருக்கடி காரணமாக மலையக விவசாயிகள் நேற்று (21) தம்புள்ளை, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட பொருளாதார நிலையங்களுக்குக் கையிருப்பில் உள்ள மரக்கறிகளை வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தினர்.
இதன் காரணமாக பேலியகொட மெனிங் சந்தை மற்றும் பல பொருளாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் மரக்கறிகளின் அளவு, குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் மரக்கறி விநியோகம் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக காணப்படுகின்றது.
அதேபோல கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறி வகைகளின் விலைகள் மிக அதிகமாக காணப்பட்டதுடன், கொழும்பு – கோட்டையை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் விலை மிக அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com