
1969 ஆம் ஆண்டு இலக்கம் 01 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டதின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பிலான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
03. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
கொவிட் – 19 தொற்றால் அந்நிய செலாவணியின் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தின் காரணமாக பொருட்கள் இறக்குமதி செய்வதை முறைமைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சுங்கவரியை தீர்மானிக்கும் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஏற்புடைய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.