தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றி (03) ரவு கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக நிதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கமைவாக ஒரு கிலோ கோதுமை மாவை 80 ரூபாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கோதுமை மா மானியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தச் சலுகைத் திட்டத்திற்காக வருடத்திற்கு செலவாகும் தொகை 229 மில்லியன் ரூபாவாகும். அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாக் கொடுப்பனவைச் செலுத்துவதற்காக வருடத்திற்கு 87 பில்லியன் ரூபா செலவாகும். ஓய்வூதியக் காரர்களுக்காக 40 பில்லியன் ரூபாவும் வீட்டுத்தோட்ட மானியத்திற்காக 31 பில்லியன் ரூபா செலவாகும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சலுகைகளை வழங்குவதற்காக செலவாகும் பணத்தை ஈடுசெய்வதற்கென வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் இதற்காக மாற்றுத் திட்டம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார.

கொவிட் தொற்றுக் காரணமாக பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு சலுகை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இதன்படி, அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியக் காரர்களுக்கும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 3 ஆயிரத்து 500 ரூபா மாதாந்த கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பசளை பிரச்சினை காரணமாக நெல் அறுவடை 20 முதல் 30 சதவீதத்தால் குறையக்கூடிய சாத்தியம் இருப்பதால் அந்த நட்டத்தை ஈடுசெய்வதற்காக விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா மேலதிக விலையை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ நெல்லுக்கு 75 ரூபா உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும வேலைத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். வீட்டுத்தோட்ட செய்கையாளர்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 20 பேர்சஸ்சிற்குக் குறைந்த வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவும் ஒரு ஏக்கருக்குக் குறைந்த 20 பேர்சஸ்சிற்குக் கூடிய வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கப்படும். இந்தச் செய்கை வெற்றியளித்ததாக காண்டறிப்பட்டால் இந்தக் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱